தமிழன் என்று சொல்லடா!!! தலையில் அடித்து கொள்ளடா!!!!

>> Tuesday 13 April 2010

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று திருட்டுத்தனமாய் மட்டும் தான் தற்சமயம் தமிழகத்தில் சொல்ல முடியும். அந்த அளவிற்கு ஹிட்லர் காலத்தில் இல்லாத கெடுபிடி எல்லாம் மக்கள் மீதும், ஊடகங்கள் மீதும் மிக நயமாய், அன்பாய், பாசத்தோடு சுமத்தப் பட்டு இருக்கிறது. எதிர்த்து கேட்க இருப்பது இரண்டே இரண்டு ஊடகங்கள் தான். ஒன்று ஜெயா தொலைக்காட்சி அதை 5% மக்கள் கூட பார்ப்பதில்லை. இன்னொன்று துக்ளக் பத்திரிக்கை, ஆனா அதோட சர்க்குலேஷன் மற்றும் டிஸ்டிரிபியுசன் மிக குறைவு என்பதால் ஏதோ சோ ரசிகர் மன்ற பத்திரிக்கை போல வருகின்றது.

தமிழ் புத்தாண்டுதான் இல்லை என்று ஆகி விட்டதா??. ஆனால் ஊடகங்கள் என்ன செய்கின்றன???.

விஜய் தொலைக்காட்சி, தினத்தந்தி, மாலை மலர் போன்ற ஊடகங்களில் "சித்திரை திருநாள்" சிறப்பு நிகழ்ச்சிகள்...
கலைஞர் தொலைக்காட்சியில் "அம்பேத்கார் பிறந்த நாள்" சிறப்பு நிகழ்ச்சிகள்..
ஜெயா தொலைக்காட்சியில் வழக்கம் போல் "தமிழ் புத்தாண்டு" சிறப்பு நிகழ்ச்சிகள் தான்... (ஏட்டிக்கு போட்டியாச்சே!!)
சன் தொலைக்காட்சி இதுலயும் ரொம்ப பெஸ்ட்.. "தொடக்க நாள்" சிறப்பு நிகழ்ச்சிகள்...

அட்றா சக்கை!!! அட்றா சக்கை!!!
ஆக கல்லா கட்டுறதுல மட்டும் எல்லாரும் ஒத்துமையா இருக்காங்க.. தமிழ் புத்தாண்டு சித்திரையில் பிறக்கவில்லை என்றால், எதற்காக அரசாங்க விடுமுறை? எதற்காக சிறப்பு நிகழ்ச்சிகள். ஒரு சாதாரண மாசி-1, பங்குனி-1 தினத்திற்கு தரும் சிறப்பை தந்தால் போதாதா?.. ஏன்???

நீதி மன்றத்தில் இந்த அரசாணையை எதிர்த்து பொதுநல வழக்கு நடந்த போது, அரசு வழக்கறிஞர் என்ன சொல்லி தப்பித்து கொண்டார்?. இது தமிழக அரசு தன்னோட அலுவலகங்களுக்கு மட்டும் பயன்படுத்த கூடிய அரசு நாள்காட்டி(காலண்டர்) மாற்றம், இதை மக்கள் மீது திணிக்கவில்லை என்று கூறி தமிழக அரசு தப்பித்து கொண்டது. ஆஹா!!! முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அபார வாதம். இரண்டு வருடம் ஆகி விட்டது, சிந்தித்து பாருங்கள்...ஏதாவது ஒரு அரசாணையாவது "அரசாங்கம் பயன்படுத்தும் நாள்காட்டியின் படி" என்று வருகின்றதா?. நடப்பதென்னவோ, ஊடகங்கள் வழியாக மக்கள் மீது திணிப்பு தானே??.

எனக்கு இதுல தீராத சந்தேகம் என்னவென்றால்.."விக்ருதி", "விரோதி" என்று ஆண்டு பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருக்கிறதே!!.. அப்படியே தமிழுக்கு நல்லது செய்யும் எண்ணமிருக்கும் அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும்?. இந்த ஆண்டுகளுக்கு பழங்காலங்களில் என்ன பெயர் வைத்து அழைத்தார்களோ, அதை தோண்டி எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தால், கொஞ்சமாச்சும் அர்த்தம் இருந்திருக்கும்.

இவிய்ங்க பண்ணுறதே வெட்டி வேலை
, இதுல சித்திரைல இருந்து புத்தாண்டை புடுங்கி, "தை" க்கு மாத்துனா தமிழ் நாடு வாழ்ந்துறுமோ??? ஐயா நீங்க எந்தா ஆணியும் புடுங்க வேண்டாம்!!!. (நல்லவேளை புத்தாண்டு "ஆனி"ல பொறக்கல,, நம்ம கடலை உளுந்தம் பருப்புகள் மன்னிச்சுருங்கப்பா "டங்" சிலிப் ஆயிடுச்சு கழக உடன்பிறப்புகள் "ஆணி புடுங்கி ஐயா!!"னு சொல்லி கழக வித்துவானுக ரஜினி, கமலை வச்சு ஒரு பாராட்டுவிழா எடுத்துருப்பானுக.)

தமிழ் புத்தாண்டை சித்திரையில் இருந்து "தை"க்கு மாற்றினால் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் நீடுழி வாழ்ந்திடுமோ??. நம்ம தமிழர் பண்பாடு தான் "மானாட மயிலாட" வழியே எட்டு தெசைக்கும் பரவியிருக்கே!!
அப்புறம் எதுக்குய்யா இந்த வீணாப் போன வேலை??.

அடுத்த வருடத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியையும் "தை" மாதத்திற்கு மாற்றலாம் என்று திட்டம் போட்டு இருந்தார்கள்... ஆனால் கேரளா அரசாங்கம் அணை கட்டியதும் வைகையில் எப்படியும் தண்ணீர் இருக்க போவதில்ல(இப்ப மட்டும் என்ன வாழுதாம்?)!!!, மணலையும் ஒரு வழியா சொகபோகமா கொள்ளையடிச்சு முடிச்சாச்சு!!! இனி ஒரு மொன்ன நாயும் ஆத்து பக்கம் போறதுக்கு வழி இல்ல... இனி என்ன??? மொத்தமாய் சித்திரை திருநாள் தானாக ஒழிந்து விடும் தானே?? ஹா!!!! ஹா!!!!!!

தமிழன் என்று சொல்லடா!!! தலையில் அடித்து கொள்ளடா!!!! (ஏன்னா அரசாங்கம் தான் தெனமும் வயித்துல அடிக்குதே அதுனால தலையில மட்டும் அடிச்சுக்கலாம்)

-நன்றி அயனாவரம் கஜாமணி

மானமுள்ள தமிழர்கள் அனைவரும் தமிழ் புத்தாண்டை சித்திரை திங்களில் மட்டும் தான் கொண்டாட வேண்டும்....
உங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

Read more...
முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...