வேட்டைக்காரன் - எச்சரிக்கை

>> Wednesday 16 December 2009

Read more...

வேட்டைக்காரனுக்கு போட்டி யார்???

>> Friday 11 December 2009

வேட்டைக்காரன்




******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******

******


வேறே யாரு நம்ம சேட்டைக்காரன் தான்....



நம்ம டாக்(டர்) விஜய் "ரசிகன்" மாதிரி பல படத்துல பண்ணுன களியாட்டத்துக்கு அவருக்கு டிமாண்டு.. அதே களியாட்டத்தை பண்ணுன நம்ம சேட்டைக்கார குருக்களுக்கு ரிமாண்டா???


Read more...

சாதனை செல்வன் இளைய தலைவலி!!!

>> Tuesday 10 November 2009


மத்திய ஜவுளி அமைச்சர் தயாநிதி மாறன் ஆலோசனை படி பட்டு சேலையை சட்டையா மாத்தி
"உலக சாதனை"ய புரிந்த இளைய தலைவலி டாக்(டர்) விஜய்க்கு "சாதனை செல்வன்" விருது திமுக அரசு வழங்கினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.. கொக்கா மக்கா விஜய் போட்டிருக்கிற கலர் வளையல் கூட நல்லாருக்கு, ஆனா டாக்(டர்) மூஞ்சி தான் இஞ்சி தின்ன ஏதோ மாதிரிருக்கு.

Read more...

என்ன கொடுமை கலைஞர் இது?

>> Sunday 25 October 2009

Read more...

கொய்யாலு! ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?????

>> Thursday 8 October 2009

Read more...

புரட்சி சுனாமி சாம் ஆண்டர்சன் பாலிவுட்டில் அபார சாதனை!!!

>> Wednesday 7 October 2009

"தமிழ் திரையுலகின் விடிவெள்ளி", "புரட்சி சுனாமி" மற்றும் "நடன சூறாவளி" ஆகிய ரசிக பட்டாளங்கள் வழங்கிய பட்டங்களை மக்களுக்காக சுமையென கருதாது தாங்கி கொண்டிருக்கும் நமது தல "சாம் ஆண்டர்சன்" சமீபத்தில் பாலிவுட்டிலும் கால் பதித்து தனது திறமையை திறம்பட வெளிப்படுத்தியுள்ளார்.. வெத்துவேட்டான "வேட்டைகாரன்" படத்திற்கே பல தில்லாலங்கடி விளம்பரங்களை கடந்த ஒரு வருடமாக வெளியுட்டு கொண்டுள்ள டாக்(டர்) விஜய் போன்றவர்கள் மத்தியில் விளம்பரத்தை விரும்பாது தனது முக தோற்றத்தையே முற்றிலும் மாற்றி "MUPPET" என்ற பாலிவுட் படத்தில் நடனம் என்ற பெயரில் நாதாரி தனம் புரிந்துள்ளார்.




முழு பூசணிக்காய எப்படி சோற்றில் மறைக்க முடியாதோ அதே மாதிரி தல என்னதான் ஜிங்கிடி மேக்கப் போட்டு சூறாவளியா(?????) சுழன்று டான்ஸ்(!!!!!!!!!!!) பண்ணினாலும் , அவரோட தொப்பை அது நம்ம தல "சாம் ஆண்டர்சன்" னு காமிச்சு கொடுக்குது.
"ஸ்லம்டாக் எ மில்லினர்" படத்திற்கு பிறகு இப்படத்திற்கும் , ஈடு இணையில்லா நடனத்திற்கும் நமது "புரட்சி சுனாமி" சாம் ஆண்டர்சனுக்கு இவ்வருட ஆஸ்கார் விருது கண்டிப்பாக வழங்கப் படும் என்று ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசபடுவது குறிப்பிடத் தக்கது.

முக்கிய அறிவுப்பு:

தயவு கூர்ந்து இருதய நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த நடனத்தை பார்க்க தவிர்க்கவும்.

Read more...

வைதீஸ்வரன் கோயிலும் வயித்தெறிச்சலும்!

>> Saturday 5 September 2009

நான், ஓவரா சாமி கும்பிடாதீங்க அப்படின்னா, நீங்க கேப்பீங்களா? பெரியார் சொன்னதையே நாங்க கேக்கல, இவரு வந்துட்டாரு ... அப்படின்னு சொல்லிட்டு இடத்தை காலி பண்ணிட்டு போயிடுவீங்க... இருந்தாலும் நடந்ததை சொல்றேங்க... மேலும் படிக்க..

Read more...

நடந்தது என்ன?

>> Monday 10 August 2009

ஆரம்பத்துல இருந்தே சொல்லிகிட்டு இருந்தேன், இந்த முறை முயற்சி, அடுத்த முறை வெற்றின்னு. அதே மாதிரி, இந்த முறை நடந்த, தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commssion) குரூப் -1 (Group I Services) என்கின்ற பணியின் முதன்மைத் தேர்வில் (Prelims) நான் தோற்றுவிட்டேன்.

சற்றே நிமிர்ந்தும், குணிந்தும், நடந்தும் பார்த்துவிட்டு, சிறிது நேரம் அமர்ந்து சிந்தித்துப் பார்த்தேன். நடந்தது என்ன? என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.

இதுதான் நடந்தது...

ஆரம்பத்தில் இருந்த ஆர்வம், வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியது. பல்வேறு சூழல்கள், பயணங்கள், பணிகள் என்று காரணங்கள் பலவற்றை குறிப்பிட்டாக வேண்டும்.

இந்தத் தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டியது இதுதான்,

1. 6 முதல் 10 ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை (கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல், குடிமையியல்) நன்றாக படித்து தெளிவாக வேண்டும்

2. தினமும் வரும் முக்கியமான செய்திகளை படித்து, அதை குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும்

3. தொலைக் காட்சி அல்லது தமிழில் தினமனி போன்ற ஊடகங்களை தினமும் ஒரு முறையேனும் வாசித்து விட வேண்டும்

4. தமிழில் இலக்கியங்கள், புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், எழுதிய ஆசிரியர்கள் மற்றும் அவரது படைப்புகளை நன்கு அறிந்து வைத்திருத்தல் அவசியம்

5. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் (Indian Constitution) சாராம்சங்களையும், அதில் உள்ள பிரிவுகளையும் (Articles) நன்கு அறிந்து வைத்திருத்தல் அவசியம்

6. இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் (Census) முறைகள், சென்ற முறை கணக்கெடுப்பின்படி உள்ள புள்ளியல் விவரங்களை தொகுத்து வைத்துப் படித்து தெளிதல் வேண்டும்.

7. இந்தியாவில், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பற்றிய புள்ளி விவரங்களை தொகுத்து வைத்து படித்து தெளிதல் அவசியம்

8. கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்தல்கள், அவற்றில் வெற்றி பெற்றவர்கள் விவரங்களையும் தெளிந்து தெரிதல் வேண்டும்.

9. இடைத் தேர்தல்கள் பற்றிய விவரங்களை அறிந்திருக்க வேண்டும்.

10. துறை சார்ந்த அரசு அதிகாரிகளின் விவரங்கள், துறையின் தலைவர்கள், விசாரணைக் குழுக்கள், அவற்றின் உறுப்பினர்கள், முடிவுகள்.

மேற்கண்ட அனைத்தையும் செய்திருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன். ஆனால், வெகு சில விவரங்களையே சேகரித்து வைத்துக் கொண்டு தேர்வை சந்தித்தேன்.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எந்த தேர்வு எழுத விரும்பினாலும், மேற்கண்ட 10 விவரங்களை அடிப்படையாக வைத்துக் கொள்ளவும். இதைத் தவிர்த்து கேள்விகள் வர முடியாது. வராது.


அடுத்த ஆண்டிற்கான தேர்வு அறிவிப்பு வரும் நவம்பர் மாத அளவில் வெளி வரும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையத்தில் (http://tnpsc.gov.in/recruitment.htm) இதற்கான அறிவிப்பு இருக்கும்.

மேலும் விவரம் அறிய பின்னூட்டுங்கள்!

Read more...

பெருமைக்குரியவர்கள் ...

>> Friday 22 May 2009

உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் உண்டு. தனி மனிதனுக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு இனத்திற்கும் கூட ஒரு குணம் உண்டு. உலகம் உருவான காலத்தில் இருந்து, பல கால கட்டங்களில், பல மனிதர்கள், பல காரணங்களுக்காக பெருமை வாய்ந்தவர்களாக இருந்திருக்கின்றார்கள். அவர்களில் சிலர் இங்கே!

மார்டின் லூதர் கிங்

அமெரிக்காவில், அமெரிக்கர்களால், ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக்கேட்டு, தமது இனத்திற்காக, இனத்தின் உரிமைகளுக்காக, தனி மனித உரிமைகளுக்காக, அடிமைகள் என்ற வார்த்தையை அகராதியிலிருந்து அடியோடு அழிப்பதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்து, அரும்பாடு பட்டு, கொலையுண்டு மாண்ட ஒரு மாவீரர் இவர். இவரது செயல்களுக்காக, இவருக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு கூட அளிக்கப்பட்டது.

வின்ஸ்டன் சர்ச்சில்

இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்து, படித்து, இராணுவத்தில் பணியாற்றி, அரசியல் பணியாற்றி, 2 முறை இங்கிலாந்தின் பிரதமராகி, 1945 ல் ஜெர்மனிக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்றவர். இங்கிலாந்தில் மட்டுமன்றி, உலகத்திலேயே இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஒரே பிரதமர் என்ற பெருமைக்குரியவர்.
மகாத்மா காந்தி

தென்னாப்பிரிக்காவில் வாழும் சிறுபான்மை இந்தியர்களுக்காக போராடியவர், இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர், இந்தியா என்றொரு நாடுண்டு என்பதை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர்.


எம். ஜி. ஆர்

ஏழை எளிய மக்களின் நலனுக்காக அக்கறை காட்டியவர். அள்ளிக் கொடுத்த வள்ளல், தமிழர்களின் கல்வி முறையை சீரமைத்து, ஏழை எளியவர்களும் கல்வி கற்க வழிவகை செய்தவர் என்ற பெருமைக்குரியவர்.


கலைஞர் கருணாநிதி

ஈழத்தில் போர் நிறுத்தம் வரவேண்டும், இல்லையென்றால் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விடுவார்கள் என்று சென்னையில் இருந்தபடியே மிறட்டல் நாடகம் நடத்தியவர். பின்பு, மத்திய அரசானது ஈழ மக்களுக்கு உதவி செய்ய முன் வந்ததால், ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்கின்றோம் என்று கூறியவர்.

உடல் நிலை காரணமாக, டெல்லி செல்ல இயலாமல், சென்னையில் இருந்துகொண்டே, தந்தியும், கடிதமும் எழுதி எமது இன மக்களின் துயர் துடைக்க பாடுபட்டவர்.

போர் நிறுத்தத்திற்காக உண்ணநிலையையும் எடுத்தவர்.

தற்போது, மகன் அழகிரிக்காகவும், மகள் கனிமொழிக்காகவும், உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் டெல்லி சென்று அமைச்சரவையில் வாய்ப்பு கேட்டு காங்கிரஸ் கட்சியை மிரட்டுபவர்.

அது கிடைக்கவில்லை என்றதும், வெளியில் இருந்து ஆதரவை அளிப்பதாக அறிவித்தவர்.

உலகமே தமிழனத்தின் தலைவர் என்று தம்மை கூறிக்கொண்டிருந்த வேளையில், தமது இனத்தின் அழிவிற்காக முழு ஆதரவை மத்திய அரசிற்கு வழங்கிய இவர், தமது குடும்பத்திற்கு பதவி கொடுக்கவில்லை என்பதற்காக, வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக முடிவு எடுத்துள்ளார்.

இதனால் இவர் உலகத்தமிழினத்தின் துரோகி என்ற பெருமைக்குரியவர்.


சார்லஸ் ஆண்டனி

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

http://jcet.blogspot.com/2007/09/arathuppal-illaraviyal-makkatperu-7.html

என்ற வள்ளுவ முனிவரின் வாக்குப்படி, தந்தைக்கும், தமது இனத்திற்கும் பெருமை சேர்த்தவன் இந்த பிள்ளை.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று கூறுவது போல், நான் வளர்ந்துவிட்டேன், என்னுடைய இளைய வயது ஈன சுகங்கள்தான் முக்கியமென்று எண்ணாமல், எமது சகோதர, சகோதரிகளின் உரிமைகளுக்காக,
தானே முன்னின்று சமர் செய்து வீர சொர்க்கம் அடந்த இவன்தான் தமிழினத்தின் வீரப்பிள்ளை என்ற பெருமைக்குரியவன்.

வேலுப்பிள்ளை பிரபாகரன்

கதிரவன் பிறந்து, எழுந்து, உலகத்தை விழிக்கச் செய்கின்றான். அதேபோல், தமிழினம் என்றோர் இனமுண்டு என்பதை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்து பெருமை, நமது தேசியத்தலைவர் அவர்களைச்சேரும்.

சராசரி மனிதனாக, ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்து, பாலூட்டி, சீராட்டி, பல்வேறு உடைகளை உடுத்தி அழகு பார்த்து, படிக்க வைத்து, அவனுக்கு மணம் செய்து வைத்து மகிழ்தலை பெரிதாக எண்ணாமல், தான் பெற்ற மகனை, தமது இனத்திற்காக முன்னின்று சமர் செய்யடா என்று கூறிய பெருமைக்குரியவர்.

பின்குறிப்பு: இந்த பதிவின் மூலம் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கில்லை. 500 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்ட மக்களுக்காக, நான் வருத்தப்படுவதற்காக மட்டுமே.

Read more...

குருப்பாதான் அலையுராய்ங்களோ???

>> Monday 11 May 2009

குருப்பாதான் அலையுராய்ங்களோ???



Read more...

தமிழக ஒபாமா!!!

ராமநாதபுரத்தை சார்ந்த வாக்காள குடிமக்களே!

ஒலக நாயகன்! தமிழக ஒபாமா! என்று பல பட்டங்களை சுமந்து வரும் அண்ணன் ஜே.கே.ரீத்தீஷ் உங்கள் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.
ராமநாதபுரத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் "ஒலகநாயகன்" தனக்கு கிடைத்த கீழ்கண்ட பட்டங்களை கொண்டு போஸ்டர் யுத்தம் புரிகிறார்.



வருங்கால நிதியமைச்சர்..!
வருங்கால ஒலக ஜனாதிபதி
தமிழக விடிவெள்ளி!
அமெரிக்காவின் விடியாத வியாழன்..!
தேர்தல் சூறாவளி!
நடன சூறாவளி!
முகவையின் முத்து!
மு.க. வின் முகவரி
ராமநாதபுரத்து மின்னல்!
ராமநாதபுர மைக்கேல் ஜாக்ஸன்!
ஈடு இனையில்லா இடி..!
கலியுக வள்ளல்..!
கண்ணு மண்ணு தெரியா கர்ணன்!
வாழும் வள்ளல்!
சின்னப் பகவதி!
சீறி வரும் காளை!
புரட்சி புறா!
தன்னலமற்ற தலைவன்..!
தமிழக ஒபாமா!!!

மேலும் விபரங்களுக்கு http://www.jkritheesh.com/


அவர் தோல்வியின் விழும்பை தழுவினால், மீண்டும் தமிழ் நாட்டில் கலைச்சேவை செய்யபோவதாக வாக்கள பெருமக்களுக்கு மிரட்டல் தெரிவித்துள்ளார்!!!

நாயகன் படத்தில் "நிலா! நிலா! ஓடி வா!!" என்ற பாடலுக்கு நடனம் என்ற பெயரில் நாதாரி தனம் புரிந்தவர், தோல்வியை தழுவினால் தான் அடுத்து எடுக்கபோகும் "தளபதி" திரைப்படத்தில் "அம்மா! இங்கே வா!வா! ஆசை முத்தம் தா!தா!" என்ற பாடலுக்கு கொலைவெறியாட்டம் புரியபோவதாக அறிவித்துள்ளார்!!!

எனவே தயவு கூர்ந்து எப்பாடு பட்டாலும் அவரை தங்கள் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக்கி டெல்லிக்கு அனுப்பிவிடுங்கள்!!! இல்லையென்றால் நடிப்பு என்ற பெயரில் நடக்கபோகும் விபரீதங்களுக்கு கம்பெனி பொறுப்பாகாது...

Read more...

கருணாநிதியின் தூள்!!!!

>> Tuesday 5 May 2009

Read more...

முட்டாள்கள் தினம்

>> Thursday 30 April 2009

முதல்வா நீ மாற்றியது தமிழ் புத்தாண்டு தினத்தை மட்டுமல்ல,
முட்டாள்கள்கள் தினத்தையும் தான்,
ஆம் உன் உண்ணாநோன்பு நாடகம்
நடந்தேறிய ஏப்ரல் 27 இனி முட்டாள்கள் தினம்

Read more...
முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...