வீதிக்கு வந்த சகோதரர்கள்...

>> Tuesday 16 September 2008







தமிழ் நாளேடுகளில் இது நாள் வரை வலம் கொண்டிருந்தவர்கள் மாறன் சகோதரர்கள். திடீரென தமிழ் நாளேடுகளில் "லீமென் சகோதரர்கள்" பற்றிய செய்திகள் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் அலசப் படும் செய்திகளானது. தமிழக அரசியலில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியவர்கள் மாறன் சகோதரர்கள். ஆனால் உலக பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்தவர்கள் நமது லீமென் சகோதரர்கள். நானும் சிறிது காலத்துக்கு முன்பு(8 மாதங்கள்) முன்பு அங்கு பணி புரிந்தவன் தான். "யானைக்கும் அடி சறுக்கும்" என்ற தமிழ் பழமொழி தான் எனக்கு லீமென் விசயத்தில் ஞாபகத்திற்கு வருகிறது.






உலகின் நான்காவது பெரிய நிதி நிறுவனத்துக்கு வந்த பேரிழப்பை நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறுகிறது. இலண்டன் மாநகரின் கெனரி வார்ஃப் (Canary Wharf) என்னுமிடத்தில் ஓங்கி உயர்ந்த கட்டிடம் தான் லீமென்னுக்கு சொந்தமானது. நான் முதன் முதலில் இலண்டனுக்கு குடி பெயர்ந்த பொழுது இக்கட்டிடதின் அருகில் படுத்து கொண்டு, நின்னு கொண்டு, ரொமாண்டிக் போஸ் கொடுத்து எடுத்த புகை படங்கள் என் மனதை விட்டு அகலா தருணங்கள். ஆனால் சிறிது காலம் (4 வருடங்கள்) கழித்து நானும் அங்கு பணி புரிவேன் என்று நினைத்து பார்க்கவில்லை. இப்பொழுது அந்த வெறிச்சோடிய ஓங்கு தாங்கான கட்டிடத்தை பார்த்தால் எனக்கு விவேக்கின் காமெடி "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!" தான் நினைவுக்கு வருகிறது.

கடைசியாக லீமென் இணையதளத்திற்கு சென்று பார்த்தேன். அந்த இணையத் தளத்தின் வேலை வாய்ப்பு பகுதியில் கீழ்க் கண்ட செய்தி கண்டு அதிர்ச்சியுற்றேன்.


" Around the world, the Lehman Brothers team is growing"


இதைத் தான் எங்க ஊர்ல "கடைய மூடிட்டு கத்திரிக்கா வியாவாரம் பண்றாய்ங்க"னு கூறுவார்கள்.


லீமெனிலில் நான் பணி(???) புரிந்த பொழுது எனது நண்பர்கள் இருவர் பேசிக் கொண்டதும் இப்பொழுது நினைவுக்கு வருகிறது..

நண்பர் 1 : மச்சி, இவன எல்லாம் எப்படி தான் லீமென்னுல சேர்த்தாய்ங்க?

நண்பர் 2 : இவனெல்லாம் ஏற்கனவே வேலை பார்த்த 5 கம்பெனியெல்லாம் மூடிட்டாய்ங்களே.. லீமென்னுக்கு நேரம் சரியில்ல போல..

நண்பர் 1 : அப்புறம் எப்படிடா இவன் மட்டும் தப்பிச்சுக்கிறான்?

நண்பர் 2: இவன் கம்பெனி விட்டு கம்பெனி ஜம்ப் அடிக்கிறது இவனுக்கு என்னவோ குரு பெயர்ச்சி தான். ஆனா அந்த கம்பெனிக்கு அது தாண்டா சனி பெயர்ச்சி.

நண்பர் 1: ஆமாண்டா, ஆமை புகுந்த வீடும் இவன் புகுந்த கம்பெனியும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை.

நண்பர் 2: ராகு, கேது பெயர்ச்சி மட்டுமில்ல இனிமே புதுசா இந்த சேது பெயர்ச்சியையும் ஜோசியத்துல பார்க்கணும்டா...


Read more...

மன மாற்றம்!

>> Monday 15 September 2008

6 ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவை விட்டு தாய்நாட்டுக்கு சென்றுவிடலாம் என்று என்னி ஊருக்கு கிளம்பிக்கொண்டிருக்கின்றேன்.

இந்த நேரத்தில், பெங்களூரு, அஹமதாபாத், டெல்லி என்று எல்லா ஊர்களிலும் வெடிகுண்டுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

நான் எத்துனை காரணங்களை முன்வைத்து, என் முடிவை எடுத்தேனோ, என் மனதை மாற்றி, அமெரிக்காவோ, அல்லது எந்த ஒரு அன்னிய நாடோ வேண்டாமென்று இருந்தேனோ அந்த மனதில் இப்போது விடை தெரியாத 
பல கேள்விகள் தோன்றியுள்ளன.

நான் படித்தேன், வேலை கிடைத்தது, என் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் என்று அளவோடு வாழ்ந்து வருகிறேன்.

முதல் கேள்வி: நானும், என் குடும்பமும், என்னை சார்ந்தவர்களும், ஏன் 'குண்டு' வெடிப்பில் இறக்க வேண்டும்?

நான் செய்த தவறு என்ன?

இந்தியனாகப் பிறந்ததா?

1993 ல் பம்பாயிலும், 1998 ல் கோயம்புத்தூரிலும், தொடங்கி, இன்றுவரை பெங்களூர், பார்லிமென்டு கட்டடம், மீண்டும் பெங்களூர், அஹமதாபாத், டெல்லி என்று தீவிரவாதத்தின் வேலைப்பாடுகள் அதிகரிக்க ஆரம்பத்துள்ளது.

இனி அடுத்து எந்த ஊரில், எந்த இடத்தில் குண்டு வெடிக்குமோ என்ற அச்சம் மக்களின் மனத்தில் ஆழப்பதிந்துள்ளது.

யார் காரணம்: 

நான் எந்த ஒரு மதத்தையோ அல்லது இனத்தையோ குறை கூறவில்லை. அரசாங்கப்பணியில் உள்ளவர்களும், அரசியல்வாதிகளும் அவர்களுடைய கடமையை அறியாமல் இருப்பதே இதற்கு காரணம்.

குற்றம் செய்தவன் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒத்துக்கொள்ளும் வேளையில் அவனுக்கு தக்க தண்டனை கொடுக்கும் நீதி மன்றம், இப்படிப்பட்ட தீவிரவாத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்க தாமதப்படுத்துவது ஏன்?

நீதிமன்றங்கள் இன்று நிதி மன்றங்கள் ஆகிவிட்டன என்று ஒரு கவிதை வரி உள்ளதை நான் இங்கே நினைத்துப்பார்க்கின்றேன்.

உண்மைதான்.

பல சங்கதிகளை, பலமுறை அலசி ஆராய ஆரம்பித்ததின் பலன், மீண்டும் அமெரிக்கவிலேயே தங்கிவிடலாமா என மனதை வினவிக்கொண்டுள்ளேன்.

எந்த ஒரு மனிதனுக்கும், அவனது அடிப்படை தேவைகளான, உணவு, உடை, உறைவிடம் கிடைத்தால் அவன்தான் உலகத்தில் அதிக மகிழ்ச்சி அடைபவன்.

ஆனால் இன்று அவைகள் இருந்தும், அடுத்த வினாடி எங்கு குண்டு வெடிக்குமோ என்றென்னும்போது, இருக்கும் இடத்தை விட்டு எங்கும் போக, தாய்நாட்டிற்கும் சேர்த்துதான், மனம் தயக்கம் கொள்கிறது.

பாதுகாப்பில்லா வாழ்க்கையில் பணமிருந்தும் என்ன பயன்?

Read more...

கடைத்தெருவுக்குப் போன மிஸ்டர்.மொக்கை...

>> Wednesday 10 September 2008

கடைத்தெருவுக்குப் போன மிஸ்டர்.மொக்கைக்கு திடீர் என்று வயிற்றைக் கலக்கியது.

அருகிலிருந்த பொதுக்கழிப்பிடத்தைத் தஞ்சம் அடைந்தார்.. அப்போது பக்கத்து அறையிலிருந்து ஒரு பரிச்சயமான குரல்..

சவுக்கியமா..?

யாரென்று சட்டென இனம்காண இயலாத குழப்பத்தில் மொக்கை பதிலளித்தார்..

ம்ம்ம் நீங்க..?

ரொம்ப நாளா பார்க்கவே முடியல..

ம்ம்ம் ஆமாம்.. கொஞ்சம் பிஸி..

அப்புறம்... எப்படிப் போகுது..?

இதைக்கூடவா கேட்டுத் தெரிந்துகொள்வார்கள் என்று அதிசயித்த மொக்கை...

ம்ம்ம் பரவாயில்ல.. சுமாரா போயிட்டு இருக்கு..?

கொஞ்சநேரம் அடுத்த அறையிலிருந்து சத்தமில்லை.. பின்னர்..

சுகப்பிரசவம் தானே..?

மொக்கைக்கு இன்னும் ஆச்சரியம்.. இப்படி ஒரு கேள்வியா என்று.. இருந்தாலும் பதிலளித்தார்..

ம்ம்ம் அப்படிதான்.. அங்க எப்புடி..?

மீண்டும் பக்கத்து அறையில் சற்று அமைதி.. பின்னர் அவன் சொன்னான்..

ஹலோ.. அப்புறமா பேசறேன் மாப்பிள்ளை.. இங்க ஒரு மூதேவி கூட கூட பேசி உயிரை எடுக்குது..!

Read more...

வெளிநாட்டுக் கல்வி!

>> Tuesday 9 September 2008

வழக்கம்போல ஒரு வணக்கம் போட்டுக்கிறேன்! :-)

நீண்ட நாள்களாக தேடியும், மற்றவர்களிடம் வினவியும், பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு (நெசமாவா?!) இதை எழுதுகிறேன்.

எனக்குள் தோன்றிய பல வினாக்களில் இதுவும் ஒன்று.

இந்தியாவில் அத்தனை கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் இருக்கும் நிலையில், மாணவர்கள் ஏன் வெளிநாட்டுக்குச் சென்று படிக்க ஆசைப்படுகிறார்கள், படிக்கிறார்கள்?

ஒரே வார்த்தையிலோ அல்லது, ஒரே வரியிலோ என்னால் விடையளிக்க முடியும். ஆனால் அது தவறாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

நான் தமிழகத்தில், திருச்சியில் இளநிலை படித்தவன். பின்னர், மேல்படிப்பில் ஆர்வமில்லாத்தால் (இளநிலையில மட்டும் ஆர்வம் இருந்தாமாதிரி !), படிக்கவில்லை.

வேலை தேடினேன், கிடைத்தது. இன்னும் பணியில் இருக்கிறேன். என்னுடன் பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலிருந்தும், இந்தியா மற்றும் வெளிநாட்டில் பயின்ற பலர் பணிபுரிகிறார்கள்.

முக்கியமாக இந்திய மாணவர்கள் மேல்படிப்புக்காக மட்டுமே வெளிநாடு செல்கின்றார்கள்.

வெளிநாடுகளுக்கு மேற்கல்வி பயில செல்வதற்கான காரணங்கள், அங்கு சென்று படிப்பின் சிறப்பம்சங்கள் இதோ உங்களுக்காக...

காரணங்கள்:

  1. மாணவர்கள் தங்களின் தனித்திறமைக்கேற்ப எதிர்பார்த்த கல்லூரிகளில் இடம் கிடைக்காமை
  2. எதிர்பார்த்த பாடங்கள் கிடைக்காமை
  3. மற்ற கல்லூரிகளில் இடம் கிடைத்து, அதில் படித்து முடித்ததும் வேலை கிடைக்காமை
  4. அப்படியே வேலை கிடைத்தாலும், சம்பளக்குறைவு (தனியார் கல்லூரி என்பதால்!)
  5. மேல் படிப்பாவது நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தால்
  6. வெளிநாட்டு மோகம்
இப்படி காரணங்கள் ஏராளம்.

இதன் சிறப்பம்சங்கள்:

1. நம் நாட்டில் தொழில் சார்ந்த கல்வி முறை உள்ளது, ஆனால் தொழில் கூடங்களுடன் ஒருங்கிணைந்த கல்வி முறை கிடையாது. வெளிநாடுகளில், எல்லா கல்வி நிறுவனங்களும் பல தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றன.

2. இவ்வாறு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதனால், ஒரு மாணவர் படித்துக்கொண்டிருக்கும் போதே, அந்த நிறுவனத்தில் வேலை பார்க்க வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதனால் படிக்கும் போதே போதிய அனுபவம் கிடைக்கின்றது.

3. அதுமட்டுமல்லாது, அப்படி வேலை பார்க்கும் காலத்தில் மாணவர்களுக்கு பணச்சுமையும் குறைகிறது.

4. ஒரு பாடத்திற்கு ஒரு புத்தகம் என்றில்லாமல், ஒரு மாணவரே அந்த பாடத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார். இச்செயல், அந்த மாணவருக்கு அந்த பாடத்தில் இருந்த அறிவுத்திறனை அதிகப்படுத்தும்.

5. வெளிநாடுகளில்தான் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது. புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், ஆராய்ச்சிகள் என எல்லாமே வெளிநாடுகளில்தான் ஆரம்பிக்கின்றன. இதனால் மாணவர்களுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்திற்கு ஏற்றார்போல் பாட திட்டங்கள் அமைக்கப்படுகின்றன.

6. மாணவர்களுக்க போதிய அளவில் கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சென்று சேர்கின்றன.

7. கல்விக் காலம் மாணவர்களால் நிச்சயிக்கப்படுகின்றது.

8. பாடங்களும் மாணவர்களால் நிச்சயிக்கப்படுகின்றது. வேண்டிய பாடங்களை எடுத்து விரும்பி படிக்கலாம்.

9. பேராசிரியர்கள், அதிகம் படித்தவர்களாகவும், ஆராய்ச்சி வல்லுனர்களாகவும் இருக்கின்றனர். ஆகையால் மாணவர்களின் திறன் ஊக்குவிக்கப்படுகிறது.

10. படித்துக்கொண்டிருக்கும்போதே மாணவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கின்றது.

மேலும் விவரங்கள் அறிய பின்னூட்டமிடுங்கள்.

அப்பால பாக்கலாம்!

Read more...

இரகசிய விமான தளம்....

அது ஒரு இரகசிய விமான தளம். கட்டுப்பாடு மிக்க பிரதேசம். இந்திய வான்படைக்குச் சொந்தமான அந்தத்தளம் வேறெவரும் அறியாத ஒன்று. ஒருநாள் ஒரு தனியார் குட்டி விமானம் அங்கே வந்து தரையிறங்கியது. வான்படைக் காவலர்கள் சுற்றி வளைக்க, விமானத்தில் இருந்த ஒரே பயணியான விமானி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கடும் விசாரணைக்குப் பின், "அந்த விமானம் வழிதவறி எங்கெங்கோ அலைந்து, எரிபொருள் தீர்ந்து, வேறுவழியின்றி இந்தக் கட்டுக்காவல்மிக்க பகுதியில் இறங்கியதாகத் தெரியவந்தது. குட்டி விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. விமானி கடுமையாக எச்சரிக்கப்பட்டார். "இந்த இடம் பற்றி எவரிடமும் தெரிவிக்கக் கூடாது. மீறினால் உன் மிகுதி வாழ்க்கை சிறையில்தான்..!".விமானம் புறப்பட்டது. அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பினர். ஆனால் மறுநாளும் அதே விமானம், வந்து தரையிறங்கியது. இம்முறை அதில் இரு பயணிகள் இருந்தனர்.மீண்டும் காவலர்கள் சுற்றி வளைத்து இருவரையும் கைது செய்தனர். ஒருவர் அதே பழைய விமானி..!
வெகுண்ட வான்படை தளப் பொறுப்பாளர், விமானியின் தலைமுடியை கொத்தாகப் பிடித்து உலுக்கியபடி கேட்டார்..உன்னுடைய இந்தச் செயலுக்கு என்ன தண்டனை தெரியுமா..? "தெரியும்.. என்னை எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. 'நேற்று இரவு முழுதும் எங்கே தங்கியிருந்தீர்கள் என்று என்னை படுத்தும் என் மனைவியை நம்பவைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை..!" என்று சக பயணியான திரு"வாட்டி" மொக்கையைச் சுட்டிக்காட்டியபடி கதறினார் மிஸ்டர். விமானி..!

Read more...

பொங்கி வரும் "நயாகரா"!

>> Tuesday 2 September 2008

வணக்கம்!

மூனு நாள் விடுமுறை இருந்தா, வீட்ல ஒக்காந்துகிட்டு டி.வி ரிமோட்ல எல்லா பித்தானும் ஒழுங்கா வேலை பாக்குதான்னு ஆராய்ச்சி பன்னாம, வேற எதாச்சும் பன்னலாம்னு யோசிச்சப்போ, அலுவலகத்துல வேல பாக்குற மக்களிடம் இருந்து ஒரு அழைப்பு.

அதாங்க நம்ம ஊர்ல பணக்காரங்கல்லாம், கோடையில கொடைக்கானல் போவாங்கல்ல, அதே மாதிரி, அமெரிக்கால இருக்குற இந்தியர்களின் கோடைவாசஸ்தலமான "நயாகரா" வுக்கு செல்ல திட்டம் தீட்டிகிட்டு இருந்தாங்க.

ஜோதியில ஐக்கியமாயிட்டேன்!

மறுநாள் பயணம்னு தெரிஞ்சே முதல்நாள் பிரியாணி சாப்டு, பயணத்தை தாமதப்படுத்திய ஒரு பையன்.

9 மணி நேரம் பயணம் செய்து ஒரு இடத்தை பார்க்க போரோம், ஒரு கேமரா இல்லாம (கம்யூனிஸ்ட் மாதிரி), நாங்க எப்போதும் பி.ஜே.பி தான்னு சொல்லிகிட்டு இன்னொரு 4 பேரு.

இவங்க கூட வழக்கம்போல நம்ம ஹீரோ, அட நான்தாம்பா அது.

பயணத்தின்போது எனக்கு தேவையான அனைத்தையும் (பிரஷ், பேஸ்ட், சோப்பு, சீப்பு, துண்டு, துனிகள், கேமரா, லேப்டாப், கேமரா பேட்டரி சார்ஜர் முதலானவைகள்) முதல்நாளே எடுத்து வைத்து இருந்தேன்.

2 சீறுந்துகளில் காலை 6:30 மணிக்கு பயணத்தை ஆரம்பித்தோம். முதல் வண்டி மாலை 3:30 க்கு சென்றடைந்தது.

நான் பயணித்த வண்டி மாலை 5:30 க்கு சென்றடைந்தது.

விரைவாக குறு அலங்காரம் செய்து முடித்து கிளம்பினோம் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு.

சீறூந்துகளை சிறப்பான முறையில் நல்ல இடத்தில் $10.00 க்கு நிறுத்தி விட்டு, நடக்க ஆரம்பித்தோம்.

முதலில் பார்த்தது ஒரு பூங்கா, அதுதான் நீர்வீழ்ச்சிக்கு போகும் வழி! ஒரு வழியாக நடந்து நயாகரா ஆற்றை அடைந்தோம்.

பொன்னியின் செல்வனில் கண்டது நம் பொன்னியின் தண்ணீரை. நயாகராவில் வெகுண்டெழுந்து வந்த தண்ணீரின் வேகம், அது இசைத்த இசை, இட்ட ஓசை, போட்ட தாளம்... என்னன்னு சொல்றது...

அப்போதான் நினைச்சேன், இங்க ஒரு தடவை கல்கி வந்திருந்தா, பொன்னியின் செல்வன் எழுதி இருப்பாரான்னு!

கண்டிப்பா எழுதி இருப்பார்! (இதை இப்போதைக்கு விடுவோம்)

ஆண்டின் 365.25 நாள்களும் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டுள்ள ஒரு ஆற்றின் தண்ணீர் எங்குதான் செல்கிறது என்று பார்க்க, சிறிது தூரம் உள்நோக்கி சென்று அங்கு அதற்கென அமைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து எட்டிப்பார்த்தேன்.

குறைந்தது 300 அடி அல்லது 100 மீட்டர் உயரத்திலிருந்து ஆற்று நீர் கீழே கொட்டியது!

நான் ஒகெனெக்கல்லில் இப்படி பார்த்திருக்கின்றேன். ஆனால் இப்படி இவ்வளவு நீர் கொட்டி பார்த்ததில்லை! எல்லாம் கர்நாடகத்துக்குதான் வெளிச்சம்!

சிறிது நேரம் கழித்து, அவ்விடத்திற்குப்பின்னால் உள்ள இடத்திற்கு சென்றேன். அகண்ட நயாகராவை அங்குதான் கண்டேன்!

ஒரு சில மணித்துளிகள் மெய் சிலிர்த்துப்போனேன்!

பறந்து விரிந்த நயாகராவின் நீரானது, குதிரையின் லாட வடிவில் 300 அடிக்கு மேல் உள்ள ஒரு பாதாளத்தில் கொட்டும்போது, கிட்டத்தட்ட 300 அடி சுற்றளவிற்கு வெண்ணிற புகைபோண்ற தோற்றம் மட்டுமே கண்ணுக்கு தோண்றியது.

பார்த்த விழிகள் பார்த்தபடி அங்கிருந்து புறப்பட்டு "மெய்ட் ஆஃப் தி மிஸ்ட்" இடத்திற்கு வந்தேன்.

இருட்டிப்போனதால், பல நிறங்களில் அருவிக்கு வெளிச்சம் கூட்டினர். அதையெல்லாம் படம் பிடித்தேன்.

மிகவும் அழகாக இருந்த வெண்ணிற அருவி, நிறம் மாறிக்காட்சியளித்தது, அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையை வெளிச்சம் போட்டுக்காட்டியது.

நானும் அருவியின் அழகை அசைபோட்டுக்கொண்டே மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.

நயாகராவிற்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள், எத்தனை நாள்களுக்கு திட்டம் தீட்டுகிறார்களோ, அத்தனை நாள்களுக்கும், உணவு (கட்டுச்சோறு) எடுத்துச்செல்லுங்கள்.

இந்திய உணவகங்கள் ஏராளமாக இருந்தாலும், குறைந்த அளவு அதிக விலை! ஆகையால், நீங்களே எடுத்துச்செல்லுதல் நன்று!

நீங்கள் எங்கு தங்கினாலும், அங்கே சிறிய குளிர்சாதனப் பெட்டி வசதி இருக்கும்.

இப்பதிவில் இடம்பெற்ற அனைத்து புகைப்படங்களும் என்னால், எனது புகைப்படக் கருவியைக் கொண்டே படம் பிடிக்கப்பட்டது.

மேலும் விவரங்கள் அறிய, என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Read more...

ஒலக நாயகனின் "தசாவதாரம்"

>> Monday 1 September 2008

"வீர தளபதி" J K Rithish

அவதாரம்-1

Bulls Eye Avatar

அவதாரம்-2

Stylish Avatar



அவதாரம்-3

Victory Avatar

அவதாரம்-4

Affectionate Avatar



அவதாரம்-5

SuperStar Avatar


அவதாரம்-6

Action Avatar


அவதாரம்-7

Six-Pack Avatar


அவதாரம்-8

Romantic Avatar


அவதாரம்-9

Michael Jackson Avatar


அவதாரம்-10
Animal Avatar


Read more...
முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...