கடைத்தெருவுக்குப் போன மிஸ்டர்.மொக்கை...

>> Wednesday 10 September 2008

கடைத்தெருவுக்குப் போன மிஸ்டர்.மொக்கைக்கு திடீர் என்று வயிற்றைக் கலக்கியது.

அருகிலிருந்த பொதுக்கழிப்பிடத்தைத் தஞ்சம் அடைந்தார்.. அப்போது பக்கத்து அறையிலிருந்து ஒரு பரிச்சயமான குரல்..

சவுக்கியமா..?

யாரென்று சட்டென இனம்காண இயலாத குழப்பத்தில் மொக்கை பதிலளித்தார்..

ம்ம்ம் நீங்க..?

ரொம்ப நாளா பார்க்கவே முடியல..

ம்ம்ம் ஆமாம்.. கொஞ்சம் பிஸி..

அப்புறம்... எப்படிப் போகுது..?

இதைக்கூடவா கேட்டுத் தெரிந்துகொள்வார்கள் என்று அதிசயித்த மொக்கை...

ம்ம்ம் பரவாயில்ல.. சுமாரா போயிட்டு இருக்கு..?

கொஞ்சநேரம் அடுத்த அறையிலிருந்து சத்தமில்லை.. பின்னர்..

சுகப்பிரசவம் தானே..?

மொக்கைக்கு இன்னும் ஆச்சரியம்.. இப்படி ஒரு கேள்வியா என்று.. இருந்தாலும் பதிலளித்தார்..

ம்ம்ம் அப்படிதான்.. அங்க எப்புடி..?

மீண்டும் பக்கத்து அறையில் சற்று அமைதி.. பின்னர் அவன் சொன்னான்..

ஹலோ.. அப்புறமா பேசறேன் மாப்பிள்ளை.. இங்க ஒரு மூதேவி கூட கூட பேசி உயிரை எடுக்குது..!

3 comments:

வயசுபசங்க நாங்க ! 12 September 2008 at 05:44  

என்ன கொடும சார் இங்கயுமா நிம்மதியா போக விடமாட்டங்க போல
இருக்கே !

குடுகுடுப்பை 12 September 2008 at 11:55  

ஒழுங்கா ஒரு பின்னூட்டம் கூட போக முடியலயேப்பா

Anonymous 14 September 2008 at 00:47  

hi vetti paya pullayangalla,
sorry i dont know tamil typing but i thorughly enjoyed the write up on mokkai's adventure in in a public toilet.i also shared it with my friends. annamalai.s

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...