ஏழையின் கொதிப்பு ...

>> Monday 30 June 2008

திரைப்படங்களைப்பற்றி பல நூறு பதிவுகள், பாராட்டுக்கள், போட்டிகள்... அட அட... என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தும்...

திரைப்படம் என்பது என்ன? அது ஒரு கலையா? எத்துனை ஆயிரம் ஆண்டுகளாய், எந்த பாரம்பரியத்தால் அது பாதுகாக்கப்படுகிறது?

எது கலை? 1,2,3 என்று பல வேடங்களில் நடிப்பதா?
அல்லது, பல கோடி செலவில் படம் எடுப்பதா?
இல்லை, பல கோடி செலவு செய்து விளம்பர படுத்துவதா?

கையிலே பறை எடுத்து,
கண்ணாலே நோட்டமிட்டு,
வந்திருக்கும் அனைவரையும்,
வணங்கி அடிக்கின்றானே - மேளம்,

அதற்கு பெயர் கலை!

நடிப்பு என்பது தொழில். அதனால் ஒரு மொழிக்கோ, அதன்மூலம் பறைசாற்றிக்கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய கலாச்சாரத்திற்கோ எந்த ஒரு பயனும் இல்லை என்பதுதான் உண்மை.

காலங்கள் பல கடந்தன, கடவுள்கள் பல மாறின, கற்றுக்கொண்டவர்கள், கற்றுக்கொடுத்தவர்கள் காணாமல் போய்விட்டார்கள்...

காட்டுமிராண்டியிலிருந்து, காலிலே சக்கரம் கட்டி ஓடும் இந்த கால தலைமுறை வரை, யாரும், எவனுடைய நடிப்பை பார்த்தும் வரவில்லை, வரவும் முடியாது.

சுழன்று கொண்டிருக்கும் காலச்சக்கரத்தின் மேல் மிதிபட்டுக் கொண்டிருப்பவன்தான் மானிடன்.

ஏர்பஸ் 380 வந்தாலும்,
ஏர் உழுதுதான் இன்றும்
சோறுண்டுகொண்டிருக்கிறான்
என் கூடப்பிறந்தவன்!

எதற்காக இந்த
ஏமாற்றுவேலை?!

நள தமயந்தி என்றொரு திரைப்படம் பார்த்திருப்பீர்கள், அதிலே ஒரு காட்சி...
ஒரு உணவக திறப்பு விழாவிற்கு வருகைதரும் கமல் அங்குள்ளவர்களிடம் அவரவர்களின் மொழியிலே பேசுவார்...

ஒரு பெண் கேட்கிறாள்: உங்களுக்கு எப்படி எல்லா மொழியும் தெரியும்?
கமல்: எல்லாம் தொழிலுக்காகத்தான்.

இதுதான் உண்மை. இது தொழில். கலை அல்ல!

பலகோடிகள் செலவு செய்து படம் எடுக்கிறார்களாம், அதை ஹோட்டலிலும், கோவிலிலும், இன்னும் பல கோடிகள் செலவு செய்து விளம்பர படுத்துகிறார்களாம்.

கோடிக்கணக்கில் மக்கள்
குடிநீருக்கு போராடுகையில் - இவர்கள்
கோடிகளை வைத்து
கும்மியடிக்கப்போகிறார்களாம் - ஹோட்டலில்!

ஏழை எருமை மாட்டிற்கு
இருந்தாலும் எகத்தாளம்தான்!
ஏனிந்த சிந்தனை எனக்கில்லை - என்று
ஏக்கமாய் ஒரு கேள்வி!

போகதடா படத்துக்கு...
அம்மாவின் குரலை
அவமதித்துவிட்டு - இங்கே
சும்மா பொலம்புகிறான்!

கணக்கு பார்க்காமல்
கண்டபடி செலவிட்டு - இன்று
கடன்காரனாய் நிற்கின்றான்!
காரித்துப்பாத ஆளில்லை - உன்னை
கண்ட துண்டமாய்கூட வெட்டலாம்!

பால் பருவ குழந்தைக்கு
பசி வந்தபோது
பணமில்லை என்றவன் - நீ
பாலாபிஷேகம் செய்கிறாய்
பத்தடி கட் அவுட்டுக்கு!

யானைகட்டி போரடித்த வீட்டிலின்று - மன்
பானைகூட இல்லையே?
படம் எதுக்கடா - உனக்கு?
பைத்தியக்காரா!

மக்களே, நான் வேண்டுவது ஒன்று மட்டுமே. தயவுசெய்து, செலவு செய்து படம் பார்க்காதீர்கள்! உங்களுடைய பலவீணத்தை பலமாக தாக்கி பலபேர் வாழ்கிறார்கள் என்ற உண்மையை மறந்துவிட வேண்டாம்!

Read more...

"தி ஹேப்பனிங்" பட விமர்சனம்

>> Sunday 29 June 2008

நைட். ம. ஷ்யாமலனின் அடுத்த முயற்சி.

ஒரு நல்ல படத்தோடு ஆரம்பித்து இன்று ஆங்கில திரையுலகில் தனக்கென முத்திரை பதித்திருக்கும் இவரின் லேடஸ்ட் படைப்புதான் "தி ஹேப்பனிங்".

6த் சென்ஸ் இருப்பவர்கள் மட்டுமே பார்க்க கூடிய படங்களை மட்டுமே கொடுப்பவர் இவர். இவரின் அடுத்தடுத்த படைப்புகள் அனைத்துமே வெகு வித்தியாசமானவை.

படம் நியூ யார்க் நகரத்தில் ஒரு அழகான பூங்காவில் கோரமான தற்கொலையுடன் ஆரம்பிக்கின்றது. இயற்கையின் விளையாட்டுகளில் மழை, வெள்ளம், புயல், சுனாமி, சூறாவளி, பூகம்பம், எரிமலை என பல நிகழ்வுகள் நம்மில் யாருக்கும் புதிதானதல்ல.

அதையும் தாண்டி, புதிரான சில சம்பவங்கள் உலகில் நடந்தவண்ணம் உள்ளன. அவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து இப்படியும் நடக்கலாம் என்று கூறும் அற்புதமான கலையில் ஷ்யாமலனுக்கு நிகர் அவரேதான்.

அப்படிப்பட்ட சம்பவம்தான் நியூயார்க் நகரில் நிகழ்கிறது. அங்கிருந்து மக்கள், கதையின் நாயகன் நாயகி உள்பட, வெளியேறுகிறார்கள்.

படத்திற்கு நாயகன் ஒருவரை வைத்து, அவருக்கும் நிகழும் சம்பவத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி இருக்கும் விதம் அருமை.

சம்பவத்தின்போது, நாயகனுக்கு உதவும் ஒரு வில்லேஜ் விவசாயி, தாவரங்கள் கேட்கும் சக்திகொண்டவை என கூறுகிறார். இதன் மூலம், தாவரங்களுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டும் என்று படம் பார்க்கும் நம்மால் யூகிக்க முடிகின்றது.

கதையின் நாயகன் அவருடன் வரும் கூட்டத்தை பிரிந்து செல்ல அறிவுறுத்துகிறார். இதனால் உயிரிழப்பு தற்காலிகமாக தவிற்கப்படுகிறது.

தாவரங்களில் வேதி வினைகள் (chemical reaction) விளைவிக்கும் காற்றால் மக்களின் மனம் மாறும் என நம்ப முடிகிறது.

ஆனால், கூட்டமாக செல்லாமல் பிரிந்து சென்றால், அந்த தாக்கத்தின் வேகம் குறைவு என்னும் அறிவியல் ஒத்துக்கொள்ள முடியாததாக உள்ளது.

Special effects மிகவும் நன்றாக இருந்தபோதும், அடுத்து வரும் காட்சி எதிர்பார்த்த ஒன்றாக இருப்பது படத்தின் திரைக்கதைக்கு மைனஸ்.

ஹீரோ வெளியே வருகிறார், நடந்து சென்று காதலியுடன் இணைகிறார். ஆனால், வெளியில் காற்று மட்டும் பலமாக வீசிக்கொண்டிருக்கிறது.

இந்த காட்சியை யாரும் விமர்சிக்க முடியாத அளவிற்கு இயற்கையை காரணமாக்கி இருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

ஒவ்வொரு காட்சியிலும் நேரத்தை குறிப்பிட்டிருக்கும் இயக்குனர், இந்த சம்பவங்கள் முற்று பெற்ற நேரத்தை குறிப்பிட்டு, ஹீரோ வந்த காட்சியை யாரும் குறை கூறாமல் பார்த்துக்கொள்கிறார். நல்ல யோசனை.

படத்திற்கு பின்னனி இசை அற்புதம்.

ஊருக்கு வந்த ஹீரோ, நடந்த சம்பவத்தை மறக்க ஆரம்பிக்கும்போது, இதே போன்ற தற்கொலை சம்பவம் ரஷ்யாவில் நிகழ ஆரம்பிக்கின்றது...

திரைப்படத்தில் நிகழும் சம்பவங்களோடு பயங்கரவாதிகளை உள்ளிழுக்கும் முறை தவறான, விபரீதமான ஒன்று. அப்படிப்பட்ட ஒன்றை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் படம் பார்ப்பவர்களை ஏமாற்றவில்லை என்றாலும் எதிர்பார்த்தவர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறது என்பதுதான் உண்மை.

இசை - நன்று
இயக்கம் - நன்று
கதை மற்றும் திரைக்கதை - யோசித்திருக்கலாம்

மதிப்பென்: 5/10

Read more...

>> Saturday 28 June 2008

என் இனிய தமிழ் மக்களே....
உங்களுக்கு ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில் வர்ணித்துள்ளான் இந்த வாரதிராஜா...

நீங்கள் கேட்க்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம்,

PMஆக சேதுவும், TLஆக வாசுவும் பங்குபெரும் ஒரு நகைச்சுவை படைப்பு

இந்த படைபிற்க்காக
சுட்டது: பருத்தி வீரன் பாடலை
சுடாதது: ஆந்த பாடல் வரிகளை

Start Mizik...

Team members:
ஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
ஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera
நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera

Team members:
கூடுனுமே கூடுனுமே codeஅடிக்க மாடு போல
கூடுனுமே கூடுனுமே codeஅடிக்க மாடு போல
மாட்டுனமே மாட்டுனமே நார-PM கையிமேல
மாட்டுனமே மாட்டுனமே நார-PM கையிமேல

PM:
நிறுத்துங்கடி, ஏ நிறுத்துங்கடி, நிறுத்துங்கிறேன்ல Codeஅடிங்கடின்னா என்னா நக்கலா
ஏய் Fresher நீ இங்க வா, டேய் associate நீ இங்க வா, எல்லாம் வரிசையா நில்லு
நல்லா keybordaa வளச்சு நெளிச்சு அடிக்கனும் என்ன


Team meber:
யோவ் இங்க பாருய்யா keybordala கண்டவாக்குல கைவச்சின்னா உனக்கு delivery கிடையாது ஆமா

PM:
இங்க பார்யா கோவத்த, டேய் TL அட்ரா

TL:
நாடரிஜ்ச fresherகளா நீங்க எங்க சோடி,
உங்கள வச்சுக்கவா projectula சொல்லிப்புடுங்கடி
C plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி
C plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி
ஓன்ன quarterக்கு associataaa தூக்கிவிடட்டுமா
ஓன்ன quarterக்கு associataaa தூக்கிவிடட்டுமா


PM:
Codenna இப்படிதான் குத்தனும், என்ன புரிஞ்சுதா

Programmer:
Design correctல்லாத ப்ரொஜெக்ட்குள்ள,
இப்போரவுசு பன்னும் PM தம்பி
நைட்டெல்லாம் codeaa குத்தி,
எனக்கு கைய்யி ரெண்டும் வலிக்கிதுடா,
கைய்யி ரெண்டும் வலிக்கிதுடா


PM:
அட, ராவெல்லாம் codeaa குத்தி,
உனக்கு கைய்யி ரெண்டும் நொந்தாலென்ன
இந்த experienceஉல்ல PMகிட்ட நீயும் பாசாங்கு பண்ணாதடி

Programmer:
experienceஉள்ள PMகிட்ட நானும் பாசாங்கு பண்ணவில்ல
பாசங்கு பண்ணுரெண்டு நீயும் அறிவுகெட்டு பேசாதடா,
நீயும் அறிவுகெட்டு பேசாதடா


Tester:
அடி bodyமேல bodyவச்சி bodyக்குள்ள HTLML codeவச்சி

TL:
அட, அப்படி போடு SAppu (Senior Associate )


Tester:
ஓட்டி ஓட்டி பாத்தாலும் என் Browser Trouser கிளியுதடா

அஹா அஹா அஹா....
ஓட்ட Browserஇந்த Browser Testeruக்கு கிளியப்போகுது Trouser
ஓட்ட Browserஇந்த Browser Testeruக்கு கிளியப்போகுது Trouser


Test Lead:
அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு துக்கம் ஆகுதடா
ஆமா ஆமா ஆமோய்....

பொசகெட்ட பயேல ஒனக்கு test director கேக்குதடா

Test Manager:
QCஈல (QC = Quality Centre)...
ஆமோய் ஆமோய் ஆமோய்...
QCஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி..
QCஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி
நான் test planaai போட்டு வச்சென் MPPயில (MPP = Microsoft Project plan)
நான் test planaai போட்டு வச்சென் MPPயில

ஆனா milestoneuகிட்ட mileuuதூரம் போகமுடியல
ஆனா milestoneuகிட்ட mileuuதூரம் போகமுடியல

Designer:
Riskகுள்ள riskaபோட்டு escalateuu ஆக்கிப்புட்டு
Riskகுள்ள riskaபோட்டு escalateuu ஆக்கிப்புட்டு
சப்பையான design changeuக்கு changeaa விடாம
சப்பையான design changeuக்கு changeaa விடாம
ஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க
ஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க

TL:
அடி யாயி... ஆஹா ஆஹா ஆஹா

ELT: (Entry Level Trainee)
அள்ளி MPPயில estimateaa தூக்கி பொட்டு
அள்ளி MPPயில estimateaa தூக்கி பொட்டு
புள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
புள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
இப்பொ புலம்பினாக்க உங்கல நாங்க நம்பமுடியல

PM:
போடா போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலேபோடா
போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலே
ELT batch சின்ன பய என்னென்னமோ பேசுரானே
designerkku எனக்கும் சண்டை, இப்போ உடைய போகுது மண்டை
அட designerkku எனக்கும் சண்டை, இப்போ உடையப்போகுது மண்டை

PM & TL: என்ன fresherங்கலா keyboarda கையில வச்சிகிட்டு தலைய சொரிஞ்சிக்கிட்டு நிக்கறீங்க, codeaa நீங்க அடிக்கறீங்கலா இல்ல நாங்க அடிக்கவா.

இப்படிக்கு என்றும் பால்முகம் மாரா...உங்கள் சுட்டிப்பய புள்ள

Read more...

கவிதைகள்...

>> Friday 27 June 2008
















Read more...

இளையதளபதி ஜோக்குகள்

>> Friday 20 June 2008

ஒருத்தன் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்யும் முடிவில் இருக்கான். அவன் நண்பன் அவனை குருவி படத்துக்கு கூட்டிட்டி போறான்.
படத்தை பார்த்திட்டு, அவன் நேரா விஜய் வீட்டுக்கு போய் சொல்றான்.
"கொய்யால!!! நீயெல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏண்டா சாகணும்?"
===================================================
முதல் நபர் : எங்க ஊர்ல கப்பல் ட்ராக்குல போகும், ட்ரயின் தண்ணில போகும்,
இரண்டாம் நபர் : கேக்குறவன் விஜய் ஃபேன் மாதிரி மாக்கானா இருந்தா, குருவி ஆஸ்கர் போகனும்னு சொல்லுவீங்களே !!!===================================================
பையன் அம்மாவிடம்....
பையன் : அம்மா ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கு. எந்த செய்தி முதல சொல்ல?
அம்மா : கெட்ட செய்திய சொல்லு
பையன் : குருவி படம் ரிலீஸ் ஆகி இருக்கு
அம்மா : அப்ப நல்ல செய்தி?
பையன் :நம்ப ஊர்ல ரிலீஸ் ஆகல
===================================================
மைதானத்தில் விஜய் தோனியிடம்...
விஜய் :- சாரி தோனி.... எனக்கு இங்கிலீஷ் தெரியாது
தோனி :- சாரி... எனக்கு நீ யாருனே தெரியாது
===================================================
விஜய் பிரபுதேவாவிடம் :இந்த பாட்டு சூப்பரா இருக்கே... இத நம்ப படத்துல ரீமேக் பண்ணலாமா?
பிரபுதேவா : டேய்... நாசமா போனவனே அது தேசிய கீதம்டா!!!
===================================================

Read more...

உங்க சிரிப்பு... அது எங்க பொறுப்பு....

>> Tuesday 17 June 2008

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..
ஏன்.. ரொம்ப சண்டை போடறாரா..?
இல்லே.. டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறாருடி..!
_________________
ஏன் உங்களை அரண்மனை வேலையில் இருந்து நீக்கிட்டாங்க..?
மாமன்னர் வருகிறார்ன்னு சொல்றதுக்கு பதிலா மாமனார் வருகிறார்ன்னு சொல்லித் தொலைச்சுட்டேன்..!
_________________
கோவிலில் இருவர்..
யோவ்.. என்ன உண்டியலுக்குள்ளே கை விடறே..?
ஹி..ஹி.. தப்பா நினைக்காதீங்க.. 50 பைசா போடறதுக்கு பதிலா 1 ரூபாய் போட்டுட்டேன்.. அதான் பாக்கிக் காசை எடுக்கறேன்..
_________________
கல்யாண வீட்டில்..
மாப்பிள்ளை அடிக்கடி தரை டிக்கெட்டில் சினிமா பார்ப்பாரோ..?
அட.. ஆமாம்.. எப்படிக் கண்டுபிடிச்சீங்க..?
கரண்ட் கட் ஆனதும் மண்டபமே கிழியறாப்பல விசில் அடிக்கிறாரே..!
_________________
ஏண்டி.. உனக்கு காதல் கடிதம் எழுதினவர் சிறுகதை எழுத்தாளர்ன்னு எப்படிக் கரெக்டா சொல்றே..?
சுய விலாசமிட்ட கவரும் போதிய தபால் தலையும் இணைச்சு அனுப்பியிருக்காரே..!
_________________
இருந்தாலும் நம்ம தலைவருக்கு இவ்வளவு ஜொள்ளு ஆகாது..
ஏம்பா.. என்ன ஆச்சு.. கல்யாணம் ஆகாத பொண்ணுங்களுக்கு "கையில்லாத இலவச நைட்டி வழங்கும் திட்டம்" அறிவிச்சுருக்காரே..!
_________________
எதுக்கு தலைவரே.. மூனாவது கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஒத்தைக் காலில் நிற்கறீங்க..?
ரெண்டு கல்யாணம் பண்ணிக்கறது சட்டப்படி குற்றமாமே..!
_________________
தயாரிப்பாளர் ; நீங்க இப்போ சொன்ன கிராமத்துக் கதை நம்பும்படியா இல்லையே..
கதாசிரியர் ; கவலைப்படாதீங்க.. படம் 500 நாள் ஓடும்..
தயாரிப்பாளர் ; நீங்க முதல்ல சொன்ன கிராமத்துக் கதையே பரவாயில்லே..!
_________________
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
_________________
மேனேஜர் சார்.. உங்க ஸ்டெனோ அனு ரொம்ப அதிகப்படியா இருக்காங்க.. உங்களைப் பார்க்க வர்றப்போ என் காலை மிதிச்சுட்டு சாரி கூட சொல்லாமப் போறாங்க..
வாசலில் அனு மிதி பெற்று உள்ளே வருக ன்னு போட்டிருக்கோமே பார்க்கலையா..?
_________________
ஏண்டி.. நீ மாசமா இருக்கறது தெரிஞ்சுமா உன் புருஷன் கரண்ட் பில் கட்டாம வீட்டை இருட்டுல போட்டு வச்சிருக்காரு..?
அவர் போட்டோ கிராபர்டி.. இருட்டறையில இருந்தாதான் பிள்ளை நல்லா டெவலப் ஆகுமாம்..
_________________
அவள் ; ஏண்டி.. உனக்கு கிளார்க் லவ் லெட்டர் கொடுத்ததை மேனேஜர்கிட்ட ரிப்போர்ட் பண்ணினியா../
இவள் ; ஆமாண்டி.. நல்லா டோஸ் விட்டாரா..? என்ன சொல்லித் திட்டினார்..?
அவள் ; உனக்கு என்ன கண்ணு அவிஞ்சா போயிடுச்சு.. போயும் போயும் அந்தக் குரங்குக்கா லட்டர் கொடுத்தேன்னு திட்டினார்..
_______________
ஆபீஸ் பியூன் கிட்டே சண்டை போட்டது தப்பாப் போச்சு..?
ஏன் .. என்னாச்சு..?
சம்பள உயர்வு வந்ததை வீட்டுல போட்டுக் கொடுத்துட்டான் பரதேசி..!
_________________
நடிகை ஜிகினாஸ்ரீ இன்னிக்கு விழாவுக்கு வராங்கன்னு போனியே.. என்னாச்சு..?
கனவுக்கன்னியை கனவுல பார்த்துக்கோங்கன்னு எல்லாருக்கும் தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வச்சுட்டாங்கடா..!
_________________
ஏன் நடிகை கொய்யாஸ்ரீ திருமணத்தை பத்திரிக்கைக்காரங்க புறக்கணிச்சுட்டாங்க..?
பின்ன என்ன.. அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளையை முறைப்படி திருமணம் செஞ்சுகிட்டா கோபம் வராதா..?
_________________

காதலிதான் உனக்கு மோதிரம் கொடுத்திருக்காளே.. அப்புறம் ஏன் வருத்தமா இருக்கே..?
நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம் இதுன்னு சொல்லிட்டுப் போறாடா..!
_________________

எங்க டாக்டர் எந்த வாய்ப்பையும் தவற விடமாட்டார்..
அதுக்காக நாக்கை நீட்டச் சொல்லிட்டு அதில ஸ்டாம்பை ஒத்தி ஒட்டுறது நல்லாவா இருக்கு..?
_________________

கல்யாண நிகழ்ச்சியை ஒண்ணுவிடாம வீடியோ எடுக்கணும்ன்னு நாங்க சொன்னதை உங்கப்பன் தப்பா புரிஞ்சிகிட்டார்ன்னு நெனைக்கிறேன்..
ஏங்க..? எதுவும் தப்பாயிட்டுதா..?
முதலிரவு அறைக்குள்ள 3 கேமிரா இருக்கு பாரு..!
_________________
சேவகன்1:-"நமது மன்னருக்கு மகாராணி மீது எப்படிச் சந்தேகம் வந்தது?"
சேவகன்2:-"குட்டி இளவரசரிடம் 'நீ (good)'குட்'பாயா.. (Bad)'பேட்'பாயா?'னு மன்னர் கேட்டதுக்கு 'சிப்பாய்'னு பதில் சொன்னாராம்!"
_________________
மன்னன்: எதிரி நாட்டு மன்னனின் அறைகூவலை இனிமேலும் நம்மால் பொறுத்துக்கொள்ள இயலாது மந்திரியாரே!
மந்திரி: போருக்குத் தயாரென ஓலை அனுப்பட்டுமா மன்னா?
மன்னன்: வேண்டாம் அறைகூவல் கேட்காவண்ணம் சவுண்ட் புரூஃவ் சிஸ்டம் அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்.
_________________
பெண்:- முப்பத்தேழுக்கு மேல குழந்தை பெத்துக்கவாய்ப்பு இருக்கா, டாக்டர்?
டாக்டர்:- ஆமாம்! அதுசரி அத்தனை குழந்தைகளைப் பெத்துக்கிட்டு கின்னஸ் சாதனையா பண்ணப்போறே?
_________________
நீங்க 100 வயது வரை வாழக் காரணம்?
1905 லே பிறந்ததுதான்
_________________
ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று. ஒரு குரங்கைத் தவிர வேறு யாருமே உயிர் பிழைக்கவில்லை.. துப்பு துலக்க வசதியாக, அந்தக் குரங்குக்கு தட்டச்சு தெரிந்து இருந்தது..
அதிகாரிகளுக்கும் குரங்குக்கும் நடந்த உரையாடல் இது..
அதிகாரி ; விமானம் கிளம்பும் போது என்ன நடந்தது..? பயணிகள் என்ன செய்தார்கள்..?
குரங்கு ; சீட் பெல்ட் போட்டார்கள்..
அதி ; பணிப் பெண்கள்..?
குர ; பெல்ட் போட உதவினார்கள்..
அதி ; விமானிகள்.. ?
குர ; விமானத்தை கிளப்பினார்கள்..
அதி ; நீ என்ன செய்தாய்..?
குர ; வேடிக்கை பார்த்தேன்..
அதி ; 15 நிமிடம் கழித்து என்ன நடந்தது..?
குர ; பயணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.. பணிப்பெண்கள் பவுடர் பூசிக்கொண்டார்கள்.. விமானிகள் விமானத்தைக் கையாண்டூ கொண்டிருந்தார்கள்..
அதி ; நீ என்ன செய்தாய்..?
குர ; நான் விமானத்தை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தேன்..!
அதி ; விபத்து நடக்கும் போது என்ன நடந்தது..?
குர ; பயணிகள் தூங்கினார்கள்.. பணிப்பெண்கள் ஓய்வறைக்குப் போய்விட்டார்கள்.. விமானிகள் பணிப்பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்..
அதி ; நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?
குர ; நான் விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்..!
_________________
அந்த டாக்டர் ஒரு பெரிய தாதாவுக்கு ஆபரேஷன் பண்றதா இருந்திச்சி.. ஆனா டாக்டர் முடியாதுன்னுட்டார்...
ஏன்?
எல்லோரும் என்கவுண்ட்டர்னு கிண்டல் பண்ணாங்களாம்...
_________________
அந்த டாக்டர் ரொம்ப நல்லவர்போல...
எதை வச்சு சொல்றீங்க??
ஆபரேஷனுக்கு முன்னாடி நோயாளிகிட்ட உயிர் மேல ஆசை இருந்தா ஓடிப்போயிடுன்னு கடைசி வாய்ப்பு தர்றாரே....
_________________

Read more...

சரம் - சரமாரியாக வெடிப்பவன்

>> Friday 6 June 2008

சரம் என்றவுடன் உங்களுக்கு மல்லிகை சரம் நினைவுக்கு வந்தால் நீங்கள் WIPRO "சரோஜா சாமன் நிக்காலோ" புகழ் சரவணன் போல சமீபத்தில் திருமணம் ஆனவராக இருக்கலாம்.
சரம் என்றவுடன் சர வெடி நினைவுக்கு வந்தால் நீங்கள் ராமகிருஷ்ணன் தோத்ததிரி போல சமீபத்தில் மாமனார் காசுல தலை தீபாவளி கொண்டாடியவராக இருக்கலாம்.

சரம் என்றவுடன் அவ"சரமா" டாய்லெட்டுக்கு ஓடியது நினைவுக்கு வந்தா நீங்க டயாபெட்டிஸ் நேயாளியா இருக்கலாம்.
சரம் என்றவுடன் சூடி கொடுத்த சுடர் கொடி நினைவுக்கு வந்தால் நீங்க பெரும் பழமாக (கிட்டதட்ட என்னை மாதிரி) இருக்கலாம்.
சரம் என்றவுடன் பச்சை கிளி முத்துச் சரம் என நீங்கள் பாடினால் நீங்கள் எம்ஜிஆர் ரசிகர். கரக்ட்டா? இல்ல, டக்குனு ஜோதிகா முகம் நினைவுக்கு வந்தால் பிறர் மனை நோக்கா பேராண்மையாளர் நீங்க தான். ஹிஹி.
இதை எல்லாம் மீறி நீ என்னடா சொல்ல போற வெளக்கெண்ணைனு நீங்க முனுமுணுக்குறது எனக்கு நல்லாவே கேக்குது.


எனக்கு சமீபக்காலமா சரம் என்றாலே நான் குடியிருந்த கோயில் CULLYN தான் நியாபகத்துக்கு வந்தது.CULLYN மக்கள் பல ஆண்டுகளாக விதைத்த விதை இன்று கார்த்திக் மூலம் சரம் என்ற பயிராக உள்ளதை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். கூடிய விரைவில் (நவம்பரில்) இப்பயிர் அறுவடையும் செய்யப்படும் என்பதை தெரிவிப்பதில் பேரானாந்தம் கொள்கிறேன்

சரம் திரைப்படம் வாழ துடிக்கும் ஒவ்வொரு சராசரி இளைஞனின் வாழ்வியல். இது சாதாரண திரைப் படங்களுக்கு நடுவினில் விரிந்திருக்கும் திரைக் காவியம். இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் விமலன் திரையுலகிற்கு புதுமுகமாக இருந்தாலும், பன்முகம் காட்டி பிரமிக்க வைக்கிறான்.

என்னுடைய நீண்ட கால கிளாஸ்மேட் (படிப்பில் அல்ல!!! சரக்கு அடிப்பதில்!!) செந்தில் வில்லன் கேரக்டருக்கு ஒரு புதிய அத்தியாயத்தை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் ரகுவரன் இழப்பால் வலுவிழந்த தமிழ் திரையுலகிற்கு செந்திலின் வரவு நிச்சயமாக பலம் கூட்டுமென்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

போலீஸ் அதிகாரியாக வாழ்ந்துக் காட்டியுள்ள என்னுயிர் தோழன் கிஷ்ணா(எ) கிருஷ்ணா பத்மாபய்யர் ரசிகர்களை மிரள வைத்துள்ளான். இப்படத்தில் நடிப்பதற்காக என்கவுண்டர் புகழ் அதிகாரி ஜாபர் சேட்டிடம் கிஷ்ணா ஸ்பெஷல் டிரைனிங் எடுத்து படத்தில் மலைக்க வைத்துள்ளான்.

டபாய் கார்த்தி கேமராவை கையாண்ட விதம் மனதிற்கு மிகவும் இதமாக உள்ளது. கேமராவின் ஒவ்வொரு கோணத்திலும் அவனுடைய கடின உழைப்பு தெளிவாக தெரிகிறது. கார் சேஸிங் காட்சிகளை படமாக்கியுள்ளவிதம் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு சவால் விடும் வண்ணம் உள்ளது.

இப்படத்தில் டைரக் ஷனும் ஒளிப்பதிவும் இரட்டைக் குழல் துப்பாக்கிப் போல் பயமுறுத்துக்கின்றன. இப்படத்திற்காக கார்த்திக்கு மிகச் சிறந்த டைரக்டர் & ஒளிப்பதிவாளர் அவார்டு கெடைக்கும் என்று பரவலாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

Read more...

"சரம்"(Saram) - Starring "Ilaya Tsunami" Vimalan - Trailer Released

>> Thursday 5 June 2008




The eagerly awaited "சரம்" Movie Trailer (Cullyn Dreamworks presentation) starring "Ilaya Tsunami" Vimalan and directed by Karthik Natarajan, was released yesterday (4-Jun-08) afternoon and created a sensation amongst the public.


Initial audience reviews for "Saram" have been fantastic and the trailer seems to have exceeded everyone's expectation in line with the big hype that preceeded its launch.

According to the trailer, the movie is planned to hit the big screen in November '08. Can't wait !!!


வெட்டி பய புள்ளைக சங்கம் - EXCLUSIVE Internet launch!
Check out the trailer below...






Read more...

எது நல்ல கதை - இவர்களிடம் கேளுங்கள்

>> Tuesday 3 June 2008

1. டாக்டர்

"கதையோட கரு கலையாம நிலைச்சு நின்னு முடியும்போது நறுக்னு மனசுல தச்ச மாதிரி
இருக்கணும்."

2. லிஃப்ட் ஆப்பரேட்டர்

"கதை ஆரம்பிச்சதுலேர்ந்து முடியரவரைக்கும் ஜிவ்னு மேல மேல போய்கிட்டே இருக்கணும்."

3. குத்துச்சண்டை வீரர்

"விறுவிறுப்பா தொடங்கி படிக்கறவங்களை திக்குமுக்காட வைச்சு நெத்தியடியா முடிக்கணும்."

4. குடிகாரன்

"என்னதான் கதை அப்படி இப்படி போனாலும் அதன் மெயின் தீம் ஸ்டெடியா நிக்கணும்."

5. பாத்திர கடைக்காரர்

"கலகலன்னு
கதை போய்கிட்டே இருந்து ஒவ்வொரு பாத்திரமும் பளிச் பளிச்னு இருக்கணும்."

6. ஓவியர்

"கதையோட நுனியும் முடிவும் என்னவென்றே தெரியாம வாசகர்களை குழப்பி அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப புரிஞ்சுக்க விட்டுடணும்."

7. லாரி டிரைவர்

"கதை ஸ்பீடா போய்கிட்டே இருந்தாலும் பல அதிரடி திருப்பங்கள் வந்துகிட்டே இருக்கணும்."

8. அரசியல்வாதி

"எடுத்தோம் கவிழ்த்தோம்னு இல்லாம படிப்படியா இதயத்தில
இடம்பிடிச்சு மனசை கொள்ளை கொள்ளணும்."

Read more...
முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...