கங்குலி ஜோக்ஸ்

>> Tuesday 20 May 2008

1. கங்குலி ரஜினியின் பஞ்ச் வசனங்கள் பேசினால்.' பவுலர் பந்து வீசுறான், கங்குலி கேட்ச் கொடுக்கிறான்'.' என் சுழி தனி சுழி '' கதம் கதம், அவுட்டானது ஆகிப் போச்சு'.'நான் எப்ப வருவேன், எப்படி அவுட்டாவேன்னு எனக்கே தெரியாது. ஆனா எப்படியும் வந்தவுடன் கரெக்ட்டா அவுட் ஆயிடுவேன்.''கங்குலி கவுண்டிங் ஸ்டார்ட்:- 10 , 9 , 8, 7,கங்குலி:- அய்யோ அப்படி இல்லீங்க. 3,2,1, அவுட். இப்படி சொல்லுங்க.'

---------------------------------------------------

2. அவன்: ஏன் கங்குலியோட இன்னொரு பேட்சுமேனும் சேர்ந்து போறாரு, ரன்னரா?

இவன்: கங்குலி அவுட் ஆனதும் இரண்டு நிமிடம் வீணாக கூடாதுன்னு கிரிக்கெட் நிர்வாகம் இப்படி பண்ணுது.

--------------------------------------------------

3. அவன் : அம்பயர் அவுட்டுனு தூக்குன கையை இறக்காம இருக்காறே ஏன்?

இவன் ; அடுத்து கங்குலி பேட்டிங்காம். எதுக்கு இரண்டு வேலை னு கையை தூக்கி இருக்கிறார்.

--------------------------------------------------

4. டோனா(ஃபோனில்) : கங்குலி இருக்காறா? நான் அவரோட மனைவி பேசுறேன். அவர்கிட்ட அவசரமா பேசனும்.

மறுமுனையில் : அவர் இப்பதான் பேட்டிங்கிற்கு போறார்.டோனா : அப்போ சரி! நான் ஒரு நிமிடம் லைன்ல வெயிட் பண்றேன்.

--------------------------------------------------

0 comments:

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...